நாட்டின் அரச சேவையில் நேர்மையான கலாசாரத்தையும், வினைத்திறன் மிக்க சேவையையும் கட்டியெழுப்புவது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார். மக்கள் நலன்சார்ந்த நிர்வாகத்தை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சில் நடைபெற்ற ‘கல்வி அமைச்சின் தேசிய நேர்மை வாரம்’ ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். ‘நேர்மையான கலாசாரம் – சுத்தமான இலங்கை’ எனும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அரசாங்கம் என்ற ரீதியில் ஊழலற்ற நிர்வாகத்தை முன்னெடுப்பதற்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொண்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். இத்தகைய வேலைத்திட்டங்கள் ஊடாக அரச சேவையின் மீதான மக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அரச சேவையில் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதன் மூலம், பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். இதற்காக அனைத்து அமைச்சு மட்டங்களிலும் விழிப்புணர்வு மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

Share.
Leave A Reply

© 2026 Sinhala Win. All rights reserved.

Exit mobile version